Saturday 30 March 2013

பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்


தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

நன்றி : தினமணி

பழங்களும் பயன்களும்



1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர
மலச்சிக்கல் அற்றுப் போகும்.

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.
அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம்
தணியும். காய்ச்சல் விலகும்.

3. இளமை தரும் *தக்காளி*

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.

4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2
நாளில் பேதி நின்றுவிடும்,

5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்
தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து
தலைக்கனம் குறையும்.

8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும்.
வயிற்றுக் கோளாறு வராது.

9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம்
விலகும்.

10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு
வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் ஆஇறக்கி ஆறவைத்து
வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம்
விலகும்.

13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை
பெறும்.

அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும்.
அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

15. தாது விருத்தி தரும் *திராட்சை*

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன்

சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

16. *பப்பாளிப் பழம்*

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம்
சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

17. *வாழைப்பழம்*

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை
மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

18. *வில்வப் பழம்*

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம்
நன்கு செயல்படும்.

19. *அரசம் பழம்*

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

20. *சீமை அத்திப்பழம்*

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்.

இரத்தச் சோகை விலகும்.

21. *பேரீச்சம் பழம்*

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.

22. *தர்பூசணிப் பழம்*

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

23. *முலாம் பழம்*

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. *விளாம்பழம்*

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்

விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட,
பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

25. *அன்னாசிப் பழம்*

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச்
சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு
வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

குண்டலினி ரகசியம்


குண்டலினி
அது என்ன?,  
எங்கே இருக்கிறது?, 
எப்படி இருக்கிறது?
 என்னவெல்லாம் செய்யக் கூடியது
 இந்த குண்டலினியை எழுப்புவது,  
அதன் செயல்பாடுகள்,  
விளைவுகள்,  
அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி இருக்கிறது.

குண்டலினிக்கு முன்பு நாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் அவசியமாகிறது..நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் உள்ளது 

நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி
அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல் சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது (புலன்களிற்கு அப்பாற்பட்டது) என்கின்றனர்.

மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.இன்னும் விரிவாக சொல்ல
வேண்டுமெனில்,
  • தலையில்                          7000ம் நாடிகளும்,
  • வலது கண்ணில்                2000ம் நாடிகளும், இடது 
  • கண்ணில்                         2000ம் நாடிகளும்,
  •  மூக்கில்                           3330 நாடிகளும்,
  •  வலது காதில்                   1500 நாடிகளும்,
  •  இடது காதில்                   1500 நாடிகளும்,
  •  பின்கழுத்தில்                   1000ம் நாடிகளும்,
  •  பின்னங் கழுத்தின் கீழே    8000ம் நாடிகளும்,
  •  முதுகில்                          3680 நாடிகளும்,
  •  கண்டத்தில்                      1000ம் நாடிகளும்,
  •  நாபியில்                         8990 நாடிகளும்,
  •  வலது கையில்                 1500 நாடிகளும்,
  •  இடது கையில்                 1500 நாடிகளும்,
  •  விலாப் பகுதியில்            3000ம் நாடிகளும்,
  •  கால்களின் இடுக்கில்        8000ம் நாடிகளும்,
  •  பிஜத்தின் கீழே                2000ம் நாடிகளும்,
  •  பிஜத்தின் மேல்                   2000ம் நாடிகளும்,
  •  கோசத்தில்                     13000ம் நாடிகளும்,
  •  பாதத்தில்                       1000ம் நாடிகள் என 
ஆக மொத்தம்                       72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச்
சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

  • பிங்கலை     என்பது வலது நாசியிலும்,  
  • இடங்கலை   என்பது இடது நாசியிலும்,
  • சுழுமுனை    என்பது இவை இரண்டிற்கு நடுவிலும்
  • சிகுவை       என்பது உள்நாக்கிலும்,
  • காந்தாரி      என்பது இடது கண்ணிலும்,  
  • புருடன்       என்பது வலது கண்ணிலும்
  • அத்தி               என்பது வலது காதிலும்,  
  • அலம்புடை  என்பது இடது காதிலும்,  
  • சங்கினி           என்பது பிறப்பு உறுப்பிலும்,  
  • குரு            என்பது ஆசனவாயிலிலும் ஓடுகிறது.

                    இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். 
இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலைக்கும் இடையே உடலின் ஊடாகஅமைந் திருக்கின்றன.

இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
 உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
 பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
 பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய …………

நெற்றிவிழி புருவமத்தி
 உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
 பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
 பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
 கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
 கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
 கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
 குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே. _ காகபுசுண்டர்

1.மூலாதாரம்
 2.சுவாதிஷ்டானம்
 3.மணிபூரகம்
 4.அநாகதம்
 5.விசுத்தம்
 6.ஆக்ஞேயம்
 7.துரியம்
 என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே
 1.மூலம்
 2.தொப்பூழ்
 3.மேல்வயிறு
 4.நெஞ்சம்
 5.மிடறு
 6. புருவநடு
 7. உச்சந்தலை என ஏழு இடங்களில் அமைந்திருக்கிறது.

                    இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் நமது
 குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால்
 நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி குண்டலினி என்பது மாயமோ,
 மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை
 புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல்
 சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை
 மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல்
 என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

                    குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள்
 சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை
 மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே
 கூறியிருக்கின்றனர்.

                    குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை
 கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும்
 அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான
 மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி
 நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை
 எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின்
 பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே
 கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப்
 போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்)
 ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க
 வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க
 ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது
 சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால்
 சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க
 சக்தியற்றவனாகி விடுவான்.

குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க
 வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ
 முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே
 இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய்
 எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை
 கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம
 உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி
 சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில்
 இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை
 ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை
 ஒத்ததாக கூறுகின்றனர்.

குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
 குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
 குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
 குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
 குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
 கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
 குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
 குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.
_ காகபுசுண்டர்
குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில்
 அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.

சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
 சிறப்பான சிவயோக மென்றுபேரு
 சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
 • உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
 • உயிரின் படர் நிலைதான் மனம்.
 • மனத்திற்கு ஞானம்”, “உறுதிஎன இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
 • உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
 • நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு
 தேவைப் படுகிறது.
 • குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ
 நிலைக்கு கொண்டு செல்லலாம்.
 இதுதான் கடந்த வாரத்தின் நெடுகே நாம் பார்த்தவைகளின் சாராம்சம். இவை
 எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த
 ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட
 முந்தைய இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.
Author: Arulnithi Srinivasan B, Kundalini Yogi, Dedicated Disciple of Vethathiri Maharishi
srinivasanb2401@gmail.com