கோமாதாவின் பெருமை தெரியுமா?...
இந்து
சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப்
பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு
பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக்
கருதுகின்றனர்.
பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்
- கொம்புகளின் நுனியில் ------------ கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
- சிரம் --------------------------------------------------சிவபெருமான்
- நெற்றி நடுவில் --------------------------------சிவசக்தி
- மூக்கு நுனியில் --------------------------------குமரக் கடவுள்
- மூக்கினுள் -----------------------------------------வித்தியாதரர்
- இரு காதுகளின் நடுவில் -------------------அசுவினி தேவர்
- இரு கண்கள் ---------------------------------------சந்திரர், சூரியர்
- பற்கள் -------------------------------------------------வாயு தேவர்
- ஒளியுள்ள நாவில் ------------------------------வருண பகவான்
- ஓங்காரமுடைய நெஞ்சில் -----------------கலைமகள்
- மணித்தலம்----------------------------------------இமயனும் இயக்கர்களும்
- உதட்டில்----------------------------------------------உதயாத்தமனசந்தி தேவதைகள்
- கழுத்தில் --------------------------------------------இந்திரன்
- முரிப்பில் --------------------------------------------பன்னிரு ஆரியர்கள்
- மார்பில் -----------------------------------------------சாத்திய தேவர்கள்
- நான்கு கால்களில்-------------------------------அனிலன் எனும் வாயு
- முழந்தாள்களில் ---------------------------------மருத்துவர்
- குளம்பு நுனியில் ---------------------------------சர்ப்பர்கள்
- குளம்பின் நடுவில் ------------------------------கந்தவர்கள்
- குளம்பிம் மேல் இடத்தில் -------------------அரம்பை மாதர்
- முதுகில் -----------------------------------------------உருத்திரர்
- சந்திகள் தோறும் ----------------------------------எட்டு வசுக்கள்
- அரைப் பரப்பில் -------------------------------------பிதிர் தேவதைகள்
- யோனியில் -------------------------------------------ஏழு மாதர்கள்
- குதத்தில் -----------------------------------------------இலக்குமி தேவி
- வாயில் -------------------------------------------------சர்ப்பரசர்கள்
- வாலின் முடியில் --------------------------------ஆத்திகன்
- மூத்திரத்தில் ---------------------------------------ஆகாய கங்கை
- சாணத்தில் -------------------------------------------யமுனை நதி
- ரோமங்களில் --------------------------------------மகாமுனிவர்கள்
- வயிற்றில் -------------------------------------------பூமாதேவி
- மடிக்காம்பில்---------------------------------------சகல சமுத்திரங்கள்
- சடாத்களியில் -------------------------------------காருக பத்தியம்
- இதயத்தில் ------------------------------------------ஆசுவனீயம்
- முகத்தில் --------------------------------------------தட்சிணாக்கினி
- எலும்பிலும்,சுக்கிலத்திலும்----------------யாகத்தொழில் முழுவதும்
- எல்லா அங்கங்கள் தோறும்---------------கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.
No comments:
Post a Comment